கோலம் போட்ட பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
மதுரையில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்றதாக புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்றதாக புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணி. இவரது மனைவி ஸ்ரீமதி (45). இவர் புதன்கிழமை காலை தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ஸ்ரீமதி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.