FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

அழகன்குளத்தில் மனித வர்த்தக கடத்தல் எதிர்ப்பு தின கருத்தரங்கம்

ராமநாதபுரம் அருகேயுள்ள அழகன்குளத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமம், மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:14 am IST
பகிர்:

ராமநாதபுரம் அருகேயுள்ள அழகன்குளத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமம், மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியன இணைந்து தனியார் திருமண மண்டபத்தில் மனித வர்த்தக கடத்தல் எதிர்ப்பு தின கருத்தரங்கை வியாழக்கிழமை நடத்தினர்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி தலைமை வகித்து பேசினார். விழாவுக்கு வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.துரைமுருகன், அழகன்குளம்  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், வழக்குரைஞருமான ந.ப.அசோகன் ஆகியோ முன்னிலை வகித்தனர். சைல்டுலைன் அமைப்பின் இயக்குநர் எஸ்.கருப்பசாமி வரவேற்றார்.
கருத்தரங்கில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் ஆர்.சகுந்தலா, மாவட்ட  சமூக நல அலுவலர்  எஸ்.குணசேகரி, வழக்குரைஞர் சங்க  செயலாளர்  ஏ.ஆர்.நம்புநாயகம் ஆகியோர் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களை கடத்தினால்  தெரிவிக்க  வேண்டிய  தொலைபேசி  எண்களையும், சட்டத்தில் உள்ள  தண்டனைகள்  விபரங்களையும் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments