கீழராமநதியில் மின் கம்பங்களை சீரமைக்கக் கோரிக்கை
கமுதி அருகே கீழராமநதியில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதி அருகே கீழராமநதியில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழராமநதியில் உள்ள பெரும்பாலான மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதேபோல், பள்ளிகளின் அருகே சேதமடைந்துள்ள மின்கம்பங்களால் அவ்வழியே மாணவர்கள் அச்சமுடன் கடந்து செல்கின்றனர்.
இந்த மின்கம்பங்களிலிருந்து வீடுகளுக்கு செல்லும் இணைப்புகள், வயர்கள் அதிக அளவில் உள்ளதால் குருவிகூடு போல் காட்சியளிக்கிறது. சிறு காற்றடித்தாலும் மின் கம்பங்கள் ஆடுகின்றன. மேலும், பழுது ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்புப் பணி மேற்கொள்வதற்கும் மிகவும் சிரமப்படவேண்டியுள்ளது.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நலன் கருதி, சேதமடைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்க கமுதி மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.