FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கார் மோதி தொழிலாளி சாவு

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை செவ்வாய்க்கிழமை  இரவு கார் மோதியதில் தொழிலாளி  உயிரிழந்தார்.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை செவ்வாய்க்கிழமை  இரவு கார் மோதியதில் தொழிலாளி  உயிரிழந்தார்.
ராமநாதபுரம் அருகே உள்ள பனைக்குளம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் மகன் மகாலிங்கம்(34). இவர் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ராமேசுவரம் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் உள்ள கட்டணக் கழிப்பறையில் வேலை செய்து வந்தார். புதன்கிழமை பேருந்து நிலையத்துக்குள் வந்த கார் ஒன்று திடீரென கட்டண கழிப்பறைக் கட்டடம் மீது மோதியது. இதில்  கட்டணக் கழிப்பறை அருகே தூங்கிக் கொண்டிருந்த மகாலிங்கம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
காரின் ஓட்டுநர் உடனடியாக காரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார். சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம்   கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரான ராமநாதபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த மாரி மகன் நவீனை(20)தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments