ராமேசுவரத்தில் உயர் கோபுர எல்இடி மின் விளக்குகள் திறப்பு
ராமேசுவரம் பகுதியில் 7 உயர்கோபுர மின் விளக்குகளை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
ராமேசுவரம் பகுதியில் 7 உயர்கோபுர மின் விளக்குகளை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.34.30 லட்சம் மதிப்பில் கீழக்கரையில் 5, பிரப்பான்வலசை, சீனியப்பாதர்ஹா ஆகிய இடங்களில் தலா ஒன்று என 7 இடங்களில் உயர் கோபுர எல்இடி மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா மற்றும் சித்ரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.