சேதமடைந்த ஊராட்சி அலுவலக கட்டடம், பதிவேடுகள் பராமரிப்பதில் சிக்கல்
கமுதி அருகே மண்டலமாணிக்கத்தில் முறையான பராமரிப்பின்றி ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்துள்ளதால், ஊராட்சி பதிவேடுகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கமுதி அருகே மண்டலமாணிக்கத்தில் முறையான பராமரிப்பின்றி ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்துள்ளதால், ஊராட்சி பதிவேடுகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியது:
மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குட்பட்டு பச்சேரி, முத்துப்பட்டி, புதுப்பட்டி, வடுகபட்டி, மூலக்கரைபட்டி உட்பட 8 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான நுôறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உள்ளனர்.
ஊராட்சி பதிவேடுகளை பராமரிக்க 2001 ல், ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம் முறையான பராமரிப்பின்றி கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் காணப்படுகிறது. இதனால் ஊராட்சி பதிவேடுகள் பராமரிக்க இடமில்லாமல் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருவதால், ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மண்டலமாணிக்கம் ஊராட்சியில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.