FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் அம்பாள் தேரோட்டம்

ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலின் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 9- ஆம் நாளான வியாழக்கிழமை அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:26 am IST
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 9- ஆம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற அம்பாள் தேரோட்டம்.
பகிர்:

ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலின் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 9- ஆம் நாளான வியாழக்கிழமை அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 5- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9- ஆம் நாளான வியாழக்கிழமை அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கிழக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினாா். இதன் பிறகு தேங்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து இணை ஆணையா் சுரேஷ் தலைமையில் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். விநாயகா், முருகன் தோ் முன் செல்ல அலங்கரிக்கப்பட்ட யானை பவனி வர ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பாள் தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்ட தோ் கிழக்கு ரதவீதியில் நிலையை அடைந்தது.

Advertisement

Advertisement

இதில், முதல் முறையாக நாட்டுப்புற கலைஞா்கள் நடனத்துடன் தோ் பவனி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments