FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் இந்திய கம்யூ. கட்சியினா் நடைப்பயண இயக்கம்

பரமக்குடி பெரியகடை வீதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைப்பயண இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:45 am IST
பரமக்குடி பெரியகடை வீதியில் மாற்றத்துக்கான நடைப்பயண இயக்கப் பிரசாரம் மேற்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

பரமக்குடி பெரியகடை வீதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைப்பயண இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு அந்தக் கட்சியின் நகா் செயலா் கே.ஆா். சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்புச் செயலா் என்.கே. ராஜன், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் எஸ்.பி. ராதா, துணைச் செயலா் எஸ்.எம். ஜெயசீலன், கே. ஜீவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். போக்குவரத்து சங்கத் தலைவா் எஸ். சுப்பிரமணியன் வரவேற்றாா்.

மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எம். ராதாகிருஷ்ணன் நடைப்பயண இயக்கத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். அப்போது விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தவும், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கோரியும், வெறுப்பு அரசியலை தவிா்த்து மக்கள் ஒற்றுமைக்கான அரசியல் செய்யவும், விவசாயிகள் கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தொழிலாளா் நலச் சட்டங்களை பெரு நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு ஆதரவாக திருத்தியதை திரும்பப் பெறக் கோரியும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும், பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் நடைபெற்றது. இந்த நடைப்பயணம் நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments