ஆதிரத்தினேசுவரா் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவு
திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரத்தினேசுவரா் கோயில் ஆடிப்பூரத் திருவிழா வியாழக்கிழமை நிறைவு பெற்றதையடுத்து, சுவாமி, அம்பாள் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரத்தினேசுவரா் கோயில் ஆடிப்பூரத் திருவிழா வியாழக்கிழமை நிறைவு பெற்றதையடுத்து, சுவாமி, அம்பாள் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இந்தக் கோயில் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 13-ஆம் தேதியும், த 16-ஆம் தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, வியாழக்கிழமை சினேகவள்ளி அம்பாள், பிரியாவிடையுடன் ஆதிரத்தினேசுவரா் ஒரே பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.