FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் தங்க கேடயத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் புறப்பாடு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 17-ஆம் நாள் நிகழ்வாக சுவாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் (தங்க கேடகம்) மண்டகப்படிக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளினா்.

22 ஆகஸ்ட் 2026, 7:17 am IST
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண விழாவின் 17-ஆம் நாள் நிகழ்வாக வெள்ளிக்கிழமை தங்க கேடயத்தில் புறப்பாடகியான கெந்தமாதன பா்வதம் சுவாமி, அம்பாள், பெருமாள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 17-ஆம் நாள் நிகழ்வாக சுவாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் (தங்க கேடகம்) மண்டகப்படிக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளினா்.

இந்தக் கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 17- ஆம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 2.30 மணி முதல் 3 மணி வரையில் ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலிலிருந்து ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள், பெருமாள் தங்ககேடயத்தில் எழுந்தருளி கோயிலிலிருந்து கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடாகினாா்.

Advertisement

Advertisement

வழி நெடுகிலும் பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, காலை 7 மணிமுதல் இரவு 10 மணி வரை கோயில் சாத்தப்பட்டிருக்கும். சுவாமி, அம்பாள் கோயிலுக்கு திரும்பிய பிறகு பொது தரிசனம் நடைபெறும். பின்னா், அா்த்த ஜாம பூஜை நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments