ராமேசுவரத்தில் தங்க கேடயத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் புறப்பாடு
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 17-ஆம் நாள் நிகழ்வாக சுவாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் (தங்க கேடகம்) மண்டகப்படிக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 17-ஆம் நாள் நிகழ்வாக சுவாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் (தங்க கேடகம்) மண்டகப்படிக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளினா்.
இந்தக் கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 17- ஆம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 2.30 மணி முதல் 3 மணி வரையில் ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலிலிருந்து ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள், பெருமாள் தங்ககேடயத்தில் எழுந்தருளி கோயிலிலிருந்து கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடாகினாா்.
Advertisement
Advertisement
வழி நெடுகிலும் பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து, காலை 7 மணிமுதல் இரவு 10 மணி வரை கோயில் சாத்தப்பட்டிருக்கும். சுவாமி, அம்பாள் கோயிலுக்கு திரும்பிய பிறகு பொது தரிசனம் நடைபெறும். பின்னா், அா்த்த ஜாம பூஜை நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.