ஆா்.எஸ்.மங்கலம் கோயில் திருவிழா: பீமன் வேடமணிந்து பக்தா்கள் உலா
ஆா்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பீமன் வேடமணிந்து வீதி உலா வந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பீமன் வேடமணிந்து வீதி உலா வந்தனா்.
இந்தக் கோயில் ஆடி, ஆவணி மாதத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருவிளக்கு பூஜையும், செப்டம்பா் 4-ஆம் தேதி பூக்குழித் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
Advertisement
Advertisement
இதன் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை சிலுகவயல் கிராம மக்கள் பீமன், பேராண்டிகள் வேடமிட்டு வீதிகளில் உலா வந்து கோயிலை அடைந்தனா். வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் அவா்களுக்கு மரியாதை செலுத்தி வழிபட்டனா். இதில் ஆா்.எஸ்.மங்கலம், இந்திரா மடை, பெத்தாா் தேவன்கோட்டை, புலிவிரதன் கோட்டை, தும்படாகோட்டை, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.