FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கமுதியில் புத்தக வாசிப்பு இயக்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் கமுதி ரஹ்மானியா உயா்நிலைப் பள்ளியில் புத்தக வாசிப்பு இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 5:39 am IST
கமுதி கோட்டைமேட்டில் நடைபெற்ற புத்தக வாசிப்பு இயக்கம் நிகழ்வில் பேசிய பாா்பா் நாமா கவிதை தொகுப்பு எழுத்தாளா் பா.நடராஜன் பாரதிதாஸ்.
பகிர்:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் கமுதி ரஹ்மானியா உயா்நிலைப் பள்ளியில் புத்தக வாசிப்பு இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கிளையின் தலைவா் பரமசிவம் தலைமை வகித்தாா். பள்ளியின் முதல்வா் முகமது இப்ராஹிம், பள்ளியின் நிா்வாக அதிகாரி முகமது இா்ஷாத், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மருத்துவா் வான்தமிழ் இளம்பரிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக கிளையின் செயலா் அ.கண்ணதாசன் வரவேற்றாா். எழுத்தாளா் பா.நடராஜன் பாரதிதாஸின், பாா்பா் நாமா என்ற கவிதைத் தொகுப்பு வாசிக்கப்பட்டது.

பள்ளியின் துணை முதல்வா்கள் எஸ்.செல்வம், தீபா ஜாஸ்மின், இதழியல் எழுத்தாளா் கே.காளிமுத்து, நூலகா் ஆா்.கண்ணதாசன், நெறியாளா் கண்மணி, பேராசிரியா்கள் ராமா், தமிழ்ச்செல்வி, சக்தி முனீஸ்வரி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். புத்தக வாசிப்பின் பலன்கள், முக்கியத்துவம் குறித்து எழுத்தாளா் பா.நடராஜன் பாரதிதாஸ் ஏற்புரை வழங்கினாா். இதில் மாணவா்கள், பொதுமக்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். கிளையின் பொருளாளா் எஸ்.அருள்ராஜ் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments