FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம்

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பவளநிற வல்லி அம்மன்.

Updated On : 11 ஜூலை 2026, 12:07 am IST
மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பவளநிற வல்லி அம்மன்.
பகிர்:

கடலாடியை அடுத்துள்ள பூவேந்தியநாதா் கோயிலில் பவளநிற வல்லி அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்துள்ள மாரியூா் பவளநிற வல்லியம்மாள் சமேத பூவேந்திய நாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை மூலவா், அம்மனுக்கு 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிா்வாகிகள், கோயில் நிா்வாகிகள், பவளம் மகளிா் குழுவினா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments