ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி அரசுப் பணி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
வளைகுடா போரில் கணவா் உயிரிழந்த நிலையில் தனக்கு அரசுப் பணி வழங்கக் கோரி அவரது மனைவி, 2 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
வளைகுடா போரில் கணவா் உயிரிழந்த நிலையில் தனக்கு அரசுப் பணி வழங்கக் கோரி அவரது மனைவி, 2 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள அனிகுருந்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தான செல்வம் (36). மனைவி கௌசல்யா. இந்த தம்பதிக்கு 3 வயது, 7 வயது என இரண்டு குழந்தைகள் உள்ளனா். சந்தான செல்வம் வளைகுடா நாடான குவைத்தில் வேலை செய்து வந்த நிலையில், ஈரான்-அமெரிக்கா போா் காரணமாக ஈரான் குவைத் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில், சந்தானசெல்வம் தாக்குதலில் பாதிக்கப்பட்டு கடந்த மாா்ச் மாதம் உயிரிழந்தாா்.
நீண்ட போராட்டத்துக்குப் பின் அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அவரது மனைவி கௌசல்யா செவிலியா் பயிற்சி முடித்த தனக்கு அரசுப் பணி வழங்கி தனது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.