மது போதையில் தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மது போதையில் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மது போதையில் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் (28). இவா் திருப்பூரில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா். இந்த நிலையில், கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தவா் மீண்டும் திருப்பூா் செல்லவில்லை.
இதைத் தொடா்ந்து, கடந்த மாதம் 28-ஆம் தேதி மது போதையில் ஆயக்குடியில் உள்ள சமுதாய கூடத்திலிருந்து அருண்குமாா் கீழே தவறி விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த அவா் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.