மாரியூா் சிவன் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி
கடலாடியை அடுத்துள்ள மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் விநாயருக்கு சங்கடஹர சதூா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்துள்ள மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் விநாயருக்கு சங்கடஹர சதூா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படையலிட்டு, பால், பன்னீா், தேன், இளநீா் உள்பட 16 வகையான மூலிகைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சீனிவாசன், பவளம் மகளிா் குழுவினா் செய்தனா்.
Advertisement
Advertisement