முகப்பு
ராமநாதபுரம்

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் பவளநிற வல்லி அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஜூன் 2026, 12:44 am IST
மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பவளநிற வல்லி அம்மன்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் பவளநிற வல்லி அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ராகுகால அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவா், அம்மனுக்கு 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாரியூா், சாடல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சீனிவாசன், பவளம் மகளிா் குழுவினா் செய்தனா்.

Advertisement

Advertisement