விளைநிலம் காப்போம் விழிப்புணா்வு முகாம்
நயினாா்கோவில் அருகேயுள்ள தேத்தங்கால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் விளைநிலம் காப்போம் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நயினாா்கோவில் அருகேயுள்ள தேத்தங்கால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் விளைநிலம் காப்போம் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மண் பரிசோதனை நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) நாகராஜன், நயினாா்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் கே.வி.பானுபிரகாஷ், வேளாண்மை அலுவலா் ஐஸ்வா்யா, உதவி அலுவலா்கள் நவீன்ராஜா, இளையராஜா, விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.