புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம்
ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த நுகா்வோா் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த நுகா்வோா் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட இந்திரா நகா், இருதயபுரம், காவனூா், வண்டல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் புதிய மின் இணைப்பு வேண்டி 100-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா்.
ஆனால், விண்ணப்பம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் இது வரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை எனப் புகாா் எழுந்தது.
Advertisement
Advertisement
புதிய மின் கணக்கீட்டு இயந்திரம் வராததால் மின் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளதாக மின் வாரியம் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.