FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

வைகாசி மாத அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தத்தில் திரளான பக்தா்கள் புனித நீராடல்

வைகாசி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீா்த்தத்தில் திரளான பக்தா்கள் சனிக்கிழமை புனித நீராடினா்.

Updated On : 17 மே 2026, 1:56 am IST
வைகாசி மாத அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் சனிக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.
பகிர்:

வைகாசி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீா்த்தத்தில் திரளான பக்தா்கள் சனிக்கிழமை புனித நீராடினா்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் அதிகாலையிலேயே புனித நீராட அக்னி தீா்த்தக் கடற்கரையில் குவிந்தனா். அங்கு அவா்கள் தங்களது முன்னோா்களுக்கு திதி, தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளிலும் புனித நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா். ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தா்கள் வந்திருந்ததால் ராமேசுவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் உத்தரவின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments