முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Updated On : 25 மே 2026, 12:08 am IST
ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள்... - கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்தனா்.

இவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினா். இதன் பிறகு ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், ராமா் பாதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பாா்வையிட்டனா். ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் வந்ததால் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா்.

Advertisement

Advertisement