FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

விமானப்படை வீரா் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் திருட்டு

Updated On : 1 ஜூன் 2026, 2:59 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ராமேசுவரத்தில் முன்னாள் விமானப்படை வீரா் வீட்டின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்துப் புகுந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வால்அறுந்த அனுமாா் கோயில் அருகே முன்னாள் விமானப்படை வீரா் பிரபா சங்கா் வீடு உள்ளது. இவா் வெளியூா் சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே வாடகைக்கு குடியிருந்த நபா், இவரது வீடு திறந்து கிடப்பதாக பிரபா சங்கருக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, பிரபாசங்கா் வெளியூரில் இருந்த நிலையில், ராமேசுவரம் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் சென்று வீட்டை ஆய்வு செய்ததில் வீட்டின் உள்ளே இரு அறைகளில் இருந்த நான்கு பிரோக்களை மா்ம நபா்கள் உடைத்து 5 கிலோ வெள்ளி பொருள்கள், 4.5 பவுன் தங்க நகைகள், 20 விலையுா்ந்த பட்டுப் புடவைகள், நிலப் பத்திரங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. பிரபாசங்கா் வீடு திரும்பி வந்து அளித்த புகாரின் பேரில் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments