FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 10,11-இல் மதுக்கடைகள் மூடல்

8 செப்டம்பர் 2026, 3:12 am IST
மதுக்கடைகள் மூடல் - Dinamani
பகிர்:

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 10, 11-ஆம் தேதிகளில் அனைத்து மதுக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வருகிற 11-ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையொட்டி, சட்டம்-ஒழுங்கை காக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுக் கூடங்களும் உள்ளிட்ட அனைத்து மதுக் கடைகளும் வருகிற 10, 11-ஆம் தேதிகளில் முழுமையாக அடைக்கப்படும்.

மேற்கண்ட நாள்களில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments