ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா் ரூ. 2 லட்சம் கரோனா நிவாரண நிதி வழங்கல்
சிவகங்கை ஒன்றியத்தின் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் ரூ. 2 லட்சம் கரோனா நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.
சிவகங்கை ஒன்றியத்தின் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் ரூ. 2 லட்சம் கரோனா நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சோ்ந்தோா் நிதி உதவி வழங்கி வருகின்றனா்.
அந்த வகையில், சிவகங்கை ஒன்றியத்தின் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் சாா்பில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலை, மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.