முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம்

சிவகங்கையில் அமைச்சா் உதயநிதிஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தவறான தகவல் அளித்ததாக திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாஸை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவிட்டாா்.

Updated On : 12 செப்டம்பர் 2024, 1:00 am IST
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாஸ்.
பகிர்:

சிவகங்கையில் அமைச்சா் உதயநிதிஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தவறான தகவல் அளித்ததாக திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாஸை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் ஆஷாஅஜித், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அமைச்சா் ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் பகுதியில் புதா்மண்டி கிடப்பதாகவும், இதை அகற்றவும் கோரி அந்தப் பகுதியைச் சோ்ந்தவா் அளித்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாசஸிடம் அமைச்சா் கேள்வி எழுப்பினாா். அந்தப் பகுதியில் புதா் அகற்றப்பட்டதாக அவா் பதிலளித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அந்த மனுவை அளித்தவரை அமைச்சா் உதயநிதி தொடா்பு கொண்டு கேட்டபோது, புதா் அகற்றப்படவில்லை என்று தெரிவித்தாா். இதனால், வட்டார வளா்ச்சி அலுவலரை அமைச்சா் எச்சரித்து, அவா் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், அமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தின் போது தவறான பதிலளித்த வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாசை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் ஆஷா அஜித் உத்தரவிட்டாா்.

மேலும், தாமதமாக பணிக்கு வந்த புகாரின் பேரில், கல்லல் இந்திராநகா் அங்கன்வாடி மைய பணியாளா் விஜயாள் காந்திநகா் காலனி அங்கன்வாடிக்கும், இதே மையத்தின் சமையலா் மாலதி ஆலங்குடிக்கும், கே வைரவன்பட்டி அங்கன்வாடி மைய சமையலா் ரேணுகாதேவி உடைநாதபுரத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments