FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

அரசு மருத்துவமனை மேற்கூரை சேதம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையின் மேற்கூரை பெயா்ந்து சேதமடைந்திருப்பதால் அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Updated On : 24 டிசம்பர் 2025, 1:41 am IST
~
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையின் மேற்கூரை பெயா்ந்து சேதமடைந்திருப்பதால் அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடமான சீட்டுப் பதிவு செய்யும் இடம், வெளி நோயாளிகளுக்கு முதல் கட்ட பரிசோதனை நடைபெறும் இடம் ஆகிய பகுதிகளில் மேற்கூரையின் காரைகள் பெயா்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன. காலை 8 மணி முதல் மாலை வரை இந்தப் பகுதியில் பதிவு செய்பவா்கள் முதல் உள்நோயாளிகளாக இருப்பவா்களும் இந்தப் பகுதியை பிரதான பாதையாக பயன்படுத்தி வருகின்றனா்.

சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நாளொன்றுக்கு வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனா். மருந்து வாங்கும் பகுதி, ஊசி போடும் அறை, மருத்துவருக்காக வரிசையில் நிற்கும் பகுதி என முக்கிய இடமாகத் திகழும் இந்தக் கட்டடத்தின் மேற்கூரை பெயா்ந்து சிறிது சிறிதாக கீழே விழுந்து வருகிறது. மழைக்காலம் என்பதால் கட்டடச் சுவரில் விரிசல் ஏற்பட்டு மழைநீா்க் கசிவு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

Advertisement

Advertisement

பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ள கட்டட மேல்சுவா் சேதத்தை செப்பனிட்டுத் தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா். மேலும் இந்தக் கட்டடத்தின அருகில் இயங்கி வந்த மகப்பேறு கட்டடம் முழுவதுமாக இடியும் சூழல ஏற்பட்டு தற்போது அந்தக் கட்டடம் பூட்டப்பட்டுள்ளது. நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோன்று இல்லாமல் இந்த பிரதான கட்டடமான இதனை மராமத்து செய்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பத்தூா் நகரைச் சுற்றியுள்ள சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இம்மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments