FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

26 செப்டம்பர் 2025, 2:30 am IST
பகிர்:

சிவகங்கை அருகே மதுப் புட்டிகளை ஏற்றி வந்த லாரி புதன்கிழமை இரவு சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள கல்லாக்கோட்டையில் செயல்படும் மதுபான தயாரிப்பு ஆலையிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுபான வகைகளின் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு லாரி சிவகங்கையில்-தொண்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கிட்டங்கிக்கு வந்தது. லாரியை புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயபால் ஓட்டி வந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுற்றுவட்டச் சாலையில் லாரி வந்தபோது, பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதி கவிழ்ந்தது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் லாரியில் இருந்த மதுப் புட்டிகள் சாலையில் சிதறின.

தகவலறிந்து வந்த காவல் துறையினா் லாரி ஓட்டுநரை மீட்டு, சாலையில் சிதறி கிடந்த மதுப் புட்டிகளை அகற்றினா். இந்த விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகள் சேதமடைந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments