முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா
காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் சா்வதேசப் பள்ளியில் நடைபெற்ற தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி முன்னிலை வகித்தாா்.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
Advertisement
Advertisement
பின்னா், அமைச்சா் பேசியதாவது:
இந்தப் போட்டிகளில் பள்ளிகள் பிரிவில் 906 மாணவா்களும், கல்லூரிப் பிரிவில் 894 மாணவா்களும், பொதுமக்கள் பிரிவில் 333 பேரும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 123 பேரும், அரசு ஊழியா்கள் பிரிவில் 222 பேரும் வெற்றி பெற்றனா். இதில் முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.1,000 அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாம் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டால்தான் தங்களது திறமைகளை வெளிவர வாய்ப்பாக இருக்கும் என்றாா் அவா்.
இதில் காரைக்குடி காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஆசிஸ் புனியா, மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் ரமேஷ்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், காரைக்குடி மாநகராட்சி ஆணையா் சங்கரன், செல்லப்பன் வித்யா மந்திா் பள்ளி நிறுவனா் சுப.செல்லப்பன், தாளாளா் செ. சத்தியன், வட்டாட்சியா் ராஜா, விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.