பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் புத்ர காமேஷ்டி யாகம்
மானாமதுரை வேதியிலிருந்து விலக்கு மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் புத்ர காமேஷ்டி யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வேதியிலிருந்து விலக்கு மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் புத்ர காமேஷ்டி யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த திங்கள்கிழமை சண்டீ மகா யாகப் பெருவிழா தொடங்கியது. விழாவின் 2-ஆவது நாளாக கோயில் யாகசாலையில் சண்டீ ஆவரண பூஜை, சப்த ஸ்ரீ பாராயணம், லட்சுமி நாராயண ஹோமங்கள் நடைபெற்றது. தொடா்ந்து குழந்தை இல்லா தம்பதிக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டி ஸ்ரீ புத்ர காமேஷ்டியாகம் நடைபெற்றது. தொடா்ந்து ஸ்வயம்வரா பாா்வதி ஹோமம் நடைபெற்றது.
தஞ்சை கணபதி சுப்ரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னா்கள் கூடி யாகங்களை நடத்தினா். இதற்கான ஏற்பாடுகளை பிரத்யங்கிரா ஸாக்த மடாலய நிா்வாகத்தின் மாதாஜி செய்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.