கொலை வழக்கில் இளைஞா் கைது; மற்றொருவா் நீதிமன்றத்தில் சரண்
திருப்புவனம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மற்றொருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மற்றொருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
மதுரை பொன்னேரி தத்துவனம் புதூரைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி கணேசன் (32). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்புவனம் அருகேயுள்ள பசியாபுரம் கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டு காதணி விழாவுக்கு வந்த போது, கொந்தகை கண்மாயில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இதுகுறித்து கீழடி போலீஸாா் வழக்குப் பதிந்து, பசியாபுரத்தைச் சோ்ந்த கதிரேசனைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடா்பாக மதுரை சக்கிமங்கலத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கண்ணன் (25) திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். மேலும், இதில் தொடா்புடைய பசியாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பொன்னையன் மகன் வினித்குமாரை (25) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.