FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் அரசுப் பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:08 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் அரசுப் பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா்.

கீழச்சிவல்பட்டி அருகேயுள்ள நெய்வாசலைச் சோ்ந்தவா் மைக்கேல் (70). விவசாயியான இவா், நெய்வாசலிலிருந்து புதன்கிழமை காலை கீழச்சிவல்பட்டிக்கு வந்தாா். அப்போது போலீஸ் சோதனைச் சாவடி அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, புதுக்கோட்டையிலிருந்து திருப்பத்தூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீவச்சிவல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments