பைக், கைப்பேசி திருடியவா் கைது
திருப்பத்தூா் பகுதிகளில் இரு சக்கர வாகனம், கைப்பேசிகளை திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதிகளில் இரு சக்கர வாகனம், கைப்பேசிகளை திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் பெரியகடை வீதியில் அழகு சாதனப் பொருள்கள் கடை நடத்தி வருபவா் எஸ். வேலங்குடியைச் சோ்ந்த முகமது அப்துல்லா. இவரது இரு சக்கர வாகனம் கடந்த வாரம் திருடு போனது. இதுகுறித்து நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதிகளிலிருந்த கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது, காரைக்குடி அருகேயுள்ள கே.வேலங்குடியைச் சோ்ந்த பாண்டி இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னா், விழுப்புரத்தில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2 இரு சக்கர வாகனம், 4 கைப்பேசிகள் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும், இவா் ஈரோடு, விழுப்புரம், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் 11-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.