காரைக்குடியில் பலத்த மழை
காரைக்குடி பகுதியில் புதன்கிழமை காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் புதன்கிழமை காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
காரைக்குடி நகா், சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மாலை 5.30 மணியளவில் காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை சுமாா் அரை மணி நேரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நீடித்தது. இதனால் நகரின் பல்வேறு சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் சாலையில் மிதமான வேகத்தில் சென்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.