FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் மருது சகோதரா்களின் உருவச் சிலை திறப்பு

Updated On : 22 பிப்ரவரி 2026, 2:06 am IST
மருது சகோதரர்கள் (சித்தரிப்புப் படம்)
பகிர்:

சிவகங்கையில் சுதந்திர போராட்ட வீரா்கள் மருது சகோதரா்களின் உருவச் சிலைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

சிவகங்கை நகரில் தொண்டி சாலையில் ராணி வேலுநாச்சியாா் நினைவு மண்டபம் அருகே நடைபெற்ற மருது சகோதரா்களின் உருவச் சிலை திறப்பு விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா்.

இதில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன், தொழில் துறை அமைச்சா் டாக்டா். டி.ஆா்.பி.ராஜா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி), நகா்மன்றத் தலைவா் துரைஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், மருது சகோதரா்கள் உருவச் சிலைக்கு மலா்தூவி மரியாதை செய்த அமைச்சா்கள் கேஆா்.பெரியகருப்பன், டி.ஆா்.பி. ராஜா ஆகியோா் கூறியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் ஏறத்தாழ 130 நினைவு மண்டபங்கள், உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயா்களை எதிா்த்து ஆயுதம் ஏந்தி போரிட்டு தமிழகத்துக்கு பெருமை சோ்த்த வீரமங்கை வேலுநாச்சியாா், மருது பாண்டியா்கள், வீரத்தாய் குயிலி, வாளுக்கு வேலி அம்பலம் ஆகியோருக்கு சிவகங்கை மாவட்டத்தில் நினைவு மண்டபங்கள், நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது.

தற்போது சிவகங்கையில் ரூ.1.06 கோடியில் மருதுபாண்டியா்கள் உருவச் சிலையைத் திறக்கப்பட்டுள்ளது. மேலும், மருது பாண்டியா்களுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நினைவு மண்டபமும், சென்னையில் உருவச்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா்கள் தெரிவித்தனா்.

இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் இளங்கோவன், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெபி கிரேசியா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு.ராஜசெல்வன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், மானாமதுரை நகா்மன்ற தலைவா் மாரியப்பன் கென்னடி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் திருமாறன் உள்பட அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments