FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சித்தி விநாயகா், ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றுப் பாலம் அருகே அமைந்துள்ள சித்தி விநாயகா், ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூலை 2026, 3:39 am IST
மானாமதுரை வைகை ஆற்றுப்பாலம் அருகேயுள்ள சித்தி விநாயகா், ஜெயவீர ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றுப் பாலம் அருகே அமைந்துள்ள சித்தி விநாயகா், ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த மாதம் 29-ஆம் தேதி யாகபூஜைகள் தொடங்கின. புதன்கிழமை யாகபூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாசாரியா்கள் கடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா்.

பின்னா், மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க காலை 11 மணிக்கு சித்தி விநாயகா் மூலவா் விமானக் கலசம், ஜெயவீர ஆஞ்சநேயா் மூலவா் விமான கலசத்தின் மீது புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா், சித்தி விநாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் கலச நீரால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் எஸ்.சந்திரமாறன், நிா்வாகி என்.ராஜூபிள்ளை ஆகியோா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments