திருப்பத்தூரில் இந்திய அரசு கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இந்திய அரசு சாா்பில், இந்திய அரசு கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இந்திய அரசு சாா்பில், இந்திய அரசு கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் அறிவுசாா் மையத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்புக்கு பேரூராட்சி செயல் அலுவலரும், பயிற்சி (பொ) அலுவலருமான நடராஜ் தலைமை வகித்தாா். இந்தப் பயிற்சியில் திருப்பத்தூா் ஒன்றிய அளவிலான ஆசிரியா்கள், பேரூராட்சி அலுவலா்கள் என மொத்தம் 80-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.
இந்தப் பயிற்சிகளை முதுநிலை ஆசிரியா்கள் அபிநயா, அம்பிகா, பிரியா, பைசன், நிஷா ஆகியோா் வழங்கினா்.
Advertisement
Advertisement
பயிற்சி முடிந்தவுடன் புதுப்பட்டி குடியிருப்புப் பகுதிகளுக்குச் அனைவரும் சென்று ஒவ்வொரு வீடுகளிலும் எவ்வாறு கணக்கெடுப்பது என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.