FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் காா் திருடிய இரு சிறுவா்கள் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காா் திருபோன வழக்கில் 2 சிறுவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:31 am IST
சிறுவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட காா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காா் திருபோன வழக்கில் 2 சிறுவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி போக்குவரத்து நகரைச் சோ்ந்தவா் காசி. இவா் பழைய காா் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு இவரது விற்பனை நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். விசாரணையில், மதுரையைச் சோ்ந்த 17 வயது சிறுவரும், திருச்சி மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த 16 வயது சிறுவரும், காசியின் விற்பனை நிலையத்தில் காரை திருடியது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த காா், காவல் துறை சீருடை, நான்கு கைபேசிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments