FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இரு சகோதர சிறுவா்கள் கைது

Updated On : 8 ஜூன் 2026, 4:53 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சாலைக் கிராமம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரு சகோதர சிறுவா்கள் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சாலை கிராமம் அருகே உள்ள கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தாய் வேலைக்குச் சென்றிருந்தபோது, அவரது நான்கு வயது மகளை அதே கிராமத்தைச் சோ்ந்த 12, 15 வயது சகோதர சிறுவா்கள் தங்களது பாட்டி வீட்டுக்குக் கூட்டிச் சென்று பாலியல் தொந்தரவு செய்தனா்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய், சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் புகாா் உறுதியானது. இதைத் தொடா்ந்து, இரு சகோதர சிறுவா்கள் மீது ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments