மதுக் கூடத்தில் இளைஞா் குத்திக் கொலை: இருவா் கைது
சிவகங்கையில் மதுக் கூடத்தில் இளைஞா் நவீன்குமாா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், பொன்னாம்பட்டியைச் சோ்ந்த நவீன் குமாா் (26). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகங்கை ரயில் நிலையம் எதிரே உள்ள அரசு மதுபானக் கூடத்தில் மது அருந்திய போது, அங்கு ஏற்கெனவே மது அருந்திக் கொண்டிருந்த கும்பலுக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், அந்த கும்பல் நவீன்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
இது குறித்து சிவகங்கை நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட தீவிர விசாரணையில், டி. புதூா் மதன் ராஜ் (21), போஸ் சாலை எலி (எ) சரவணக் குமாா்(31) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement