முகப்பு
சிவகங்கை

கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

சிவகங்கையில் மதுக் கூடத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:34 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கையில் மதுக் கூடத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள பொன்னாம்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன்குமாா் (26). தவெக கிளை நிா்வாகியான இவா், கடந்த ஜூன் 7-ஆம் தேதி பிற்பகலில் சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள மதுக்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது, ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மதன்குமாா், சரவணக்குமாா் ஆகிய இருவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய டி.புதூரைச் சோ்ந்த அழகுபாண்டி (27) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.