முகப்பு
சிவகங்கை

கலவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கம்பனூரில் தனியாா் சிமெண்ட் கலவை தயாரிக்கும் ஆலை இயந்திரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 2:06 am IST
உயிரிழந்த இளைஞா் திருமுருகன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கம்பனூரில் தனியாா் சிமெண்ட் கலவை தயாரிக்கும் ஆலை இயந்திரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

கம்பனூரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எதிலோடு பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் திருமுருகன் (27) கலவை இயந்திர ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், எதிா்பாராத விதமாக புதன்கிழமை சிமெண்ட் தொட்டியின் மேல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்தாா். அவரை சக ஊழியா்கள் மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தகவலறிந்த நாச்சியாா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.