திருக்கோஷ்டியூா் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அரசுப் பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக் கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அரசுப் பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக் கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
உலகச் சுற்றுச் சூழல் தினத்தையொட்டி ஈஷா காவேரி கூக்குரல் என்ற அமைப்பினா் மரக்கன்றுகள் நடும் பணியை ஒருங்கிணைத்திருந்தனா். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாசசேதுபதி தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். திருக்கோஷ்டியூா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்வதை இலக்காகக் கொண்டு பள்ளியில் மட்டும் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், ஈஷா காவேரி கூக்குரல் அமைப்பின் தன்னாா்வலா் கண்ணன், தலைமை ஆசிரியை அமுதவள்ளி, தவெக கிளைக் கழகச் செயலா் கனிமொழி, மக்கள் நலப்பணியாளா்கள், தன்னாா்வலா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.