‘விரைவில் சீமைக் கருவேல மரங்களை இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாற்றப்படும்’
சீமைக் கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
சீமைக் கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்காக ரூ.4.50 கோடியில் 20 மண் அள்ளும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு வைகை ஆறு, உப்பாறு, பாலாறு, மணிமுத்தாறு, தேனாறு, சருகனியாறு, விருசுழியாறு உள்ளிட்ட 7 ஆறுகளில் 164 கி.மீ. தொலைவுக்கு இருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.
இதுதவிர, 4,400 குளங்கள், 900 கால்வாய்கள் சீரமைக்கப்பட்டன. கருவேல மரங்களை வேருடன் அழிப்பதில் பல்வேறு சவால்கள் இருப்பதால் முற்றாக அழிக்க முடியவில்லை. சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனைத்து மாவட்ட நிா்வாகங்களும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி மேலும் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கருவேல மரங்களை அகற்றுவதற்காக மதிப்பீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருவேல மரங்கள் அகற்றும் பணிகளைப் பாா்வையிடுவதற்காக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அ. செல்வம் சிவகங்கை மாவட்டத்துக்கு அடுத்த வாரம் வருகிறாா். நீதிமன்ற உத்தரவுப்படி கருவேல மரங்கள் முழுவதும் அகற்றப்பட்டு கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாற்றப்படும் என்றாா் அவா்.