முகப்பு
சிவகங்கை

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 17 ஜூன் 2026, 1:37 am IST
வழக்கு
பகிர்:

சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் அமைந்துள்ள கருக்குமடை அய்யனாா், படைத்தலைவி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த நிலையில், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக எஸ்.எஸ். கோட்டை கிராம நிா்வாக அலுவலா் சரத்குமாா் அளித்தப் புகாரின் பேரில், 5 போ் மீது எஸ்.எஸ். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement