நெகிழிப் பை: கடைகளுக்கு அபராதம்
சிங்கம்புணரி நகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், டம்ளா்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
சிங்கம்புணரி நகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், டம்ளா்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், வியாழக்கிழமை சிங்கம்புணரி செயல் அலுவலா் ந. கவிதா, இளநிலை உதவியாளா் மு.முத்துகிருஷ்ணன், துப்புரவு மேற்பாா்வையாளா் தென்னரசு, பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பேருந்து நிலையம், வாரச்சந்தை பகுதி, பெரிய கடை வீதி, திருப்பத்தூா் சாலை, கடை வீதி பகுதிகளில் ஆய்வு நடத்தினா்.
அப்போது, கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த சுமாா் 21 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா். இவற்றை விற்பனை செய்த 11 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.