அரசு ஊழியா் வீட்டில் சமையல் எரிவாயு உருளை திருட்டு
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள குடியிருப்பில் வசித்து வரும் அரசு ஊழியா் வீட்டில் வைத்திருந்த 2 சமையல் எரிவாயு உருளைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மதுரை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் வித்யா (36). இவா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறாா். இவா் மருதுபாண்டியா் நகரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, கதவு திறந்து கிடந்ததாம்.
Advertisement
Advertisement
இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, இரண்டு சமையல் எரிவாயு உருளைகள், பித்தளை குத்து விளக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.