டி.மல்லையாபுரத்தில் நியாயவிலை கடை திறப்பு
தினமணி செய்தி எதிரொலியாக, ஆண்டிபட்டி அருகே டி. மல்லையாபுரத்தில் வெள்ளிக்கிழமை நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.
தினமணி செய்தி எதிரொலியாக, ஆண்டிபட்டி அருகே டி. மல்லையாபுரத்தில் வெள்ளிக்கிழமை நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.
ஆண்டிபட்டி அருகே டி.மல்லையாபுரம் பகுதியினர் நியாய விலை கடையில் பொருள்களை வாங்குவதற்காக டி.பொம்மிநாயக்கன்பட்டிக்கு சென்று வரவேண்டியிருந்தது. இதனால், கால விரயம் மற்றும் வீண் அலைச்சலுக்கு ஆளாவதாக புகார் தெரிவித்தனர். இது குறித்து, கடந்த ஜனவரி 23ஆம் தேதி தினமணியில் செய்தியாக வெளிவந்தது.
இதையடுத்து, இப்பகுதியில் பகுதி நேரக் கடை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த கடையை, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. தங்க. தமிழ்செல்வன் திறந்துவைத்தார். இதில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.