சிறந்த பேரூராட்சி: பழனிசெட்டிபட்டிக்கு 2-ஆம் இடம்
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு இரண்டாவது சிறந்த பேரூராட்சிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு இரண்டாவது சிறந்த பேரூராட்சிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற சுந்திர தின விழாவில், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட 3 பேரூராட்சிகளுக்கு முதல்வர் எடப்பாடி
கே.பழனிசாமி விருதுகள் வழங்கினார். இதில், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 2-ம் இடம் பிடித்து விருது பெற்றுள்ளது. அதன்படி, விருது, சான்றிதழ், ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
நிதி மேலாண்மை, குடிநீர் விநியோகம், திடக் கழிவு மேலாண்மை, பொது சுகாதாரம், துப்புரவு பணி, வறுமை ஒழிப்புத் திட்ட செயல்பாடு, தெரு விளக்குகள் பராமரிப்பு, சிறந்த சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் ஆகியவற்றுக்காக அரசு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மு.சித்திரைக்கனி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.