FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கண்மாயில் மணல் திருட்டு: இருவர் கைது

சிவகாசி அருகே கண்மாயில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 6:17 am IST
பகிர்:

சிவகாசி அருகே கண்மாயில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி அருகே திருவேங்கடாபுரத்தில் உள்ள சிறுகுளம் கண்மாயில் சட்ட விரோதமாக மணல் திருடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு டிராக்டரில் இருவர் மணல் அள்ளிக் கொண்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் திருவேங்கடாபுரம் மணிகண்டன் (37) மற்றும் பொன்னழகு (53) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாரனேரி போலீஸார் வழக்குப் பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து, மணிகண்டன் மற்றும் பொன்னழகுவை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments